என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தூத்துக்குடி ஸ்டெர்லைட்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி ஸ்டெர்லைட்"
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #sitaramyechury #thoothukudiincident
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களை சந்தித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உரிய விதிகளை பின் பற்றாமல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கலெக்டர் அங்கு இல்லை. அப்படியென்றால் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், பெருமளவு மாசு பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #sitaramyechury #thoothukudiincident
திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் சதீஷ் வர வேற்று பேசினார். மாநில துணை செயலாளர்கள் பிரபாகரன், அரசு, எம்.கே.முருகன், வக்கீல் சுஜா அருள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, வக்கீல் மாரியப்பன், வட்ட செயலாளர்கள் மோகன்பிரபு, ஜெய்னுல் ஆப்தீன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர்.
இந்தநிலையில்அரியலூரில்வருகிற 17-ந்தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள தமிழக பாதுகாப்பு மாநாடு குறித்து திருச்சி மாவட்ட இந்து முன்னணியினர் வாகனம் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கர் மற்றும் போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்து முன்னணியினரை அங்கிருந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X