செய்திகள்
திருவள்ளூர் அருகே வீட்டு முன்பு நின்ற பெண் லாரி மோதி பலி
திருவள்ளூர் அருகே வீட்டு முன்பு நின்ற பெண் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கொசவன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி நிர்மலா (வயது 38).
நேற்று மாலை அவர் வீட்டு முன்பு நின்றபடி பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் பவித்ரா என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, வீட்டு முன்பு நின்ற நிர்மலா, பவித்ரா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பவித்ரா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து நடந்ததும். மினிலாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
திருவள்ளுர் தாலுக்கா போலீசார் பலியான நிர்மலா உடலை மீட்டு பரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.