search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வானமே கூரை, வெட்ட வெளியே கோபுரம்...
    X

    வானமே கூரை, வெட்ட வெளியே கோபுரம்...

    • நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.
    • நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.

    நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.

    இவரது சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது...

    சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் வாயு மைந்தன் என்பதால் காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.

    இவருக்கு கோபுரம் கிடையாது.

    வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார்.

    நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது.

    அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாக வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.

    நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.

    மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் நாமகிரி தாயார் கோவில் உள்ளது.

    நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது.

    நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் ஆகும்.

    பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது.

    இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது.

    பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளது.

    Next Story
    ×