search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாமக்கல் ஆஞ்சநேயர்-30 தகவல்கள்
    X

    நாமக்கல் ஆஞ்சநேயர்-30 தகவல்கள்

    • ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
    • வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.

    1) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    2) ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுவதை நாமக்கல் நகர மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இரு சக்கர வாகனங்களுக்கு பூஜைபோட கட்டணமாக ரூ.50ம், கார், வேன்களுக்கு ரூ.200ம், பஸ், லாரிகளுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

    3) வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது.

    4) ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 2009ம் ஆண்டு நடந்தது.

    6) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    7) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    8) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் மற்றும் முத்தங்கி அலங்காரம் உள்ளிட்ட கட்டளைதாரர் சேவைக்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.30 மணிக்கு தங்கத்தேரை இழுக்கலாம்.

    10) தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் அபிஷேகத்தில் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    11) மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    12) அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப் படும்.

    13) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.

    14) ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய் பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

    15) நாமக்கல் நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    16) ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    17) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    18) நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    19) 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    20) வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.

    21) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அவருக்கு நெய் தீபம் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    22) ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வார்கள். ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வது கிடையாது.

    23) நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவை அலங்காரத்தில் தரிசிப்பதன் மூலம் ராஜயோகம் கிட்டும்.

    25) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 1 லட்சத்து 8 வடை மாலையாக அணிவிக்கப்படுகிறது.

    26) எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    27) இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

    28) ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.

    29) தமிழக அரசின் அன்னதான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.2500, ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்க வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    30) ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் நித்திய கட்டளை பூஜையில் கலந்துகொள்ள வைப்பு நிதியில் ரூ.5 ஆயிரம் செலுத்தி அதில் வரும் வட்டியை கொண்டு நித்திய கட்டளை பூஜை நடத்தப்படுகிறது.

    Next Story
    ×