search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முக்கோடி ஏகாதசி
    X

    முக்கோடி ஏகாதசி

    • பதினொறாம் நாள் முக்கோடி ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
    • ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருகிறார் பெருமாள்.

    பதினொறாம் நாள் முக்கோடி ஏகாதசி என்று கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து

    தெய்வீக லயத்தை எழுப்புகின்றன.

    ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருகிறார் பெருமாள்.

    மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே!

    அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள்.

    வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார்.

    அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியோருக்கு சாத்தப்படுகிறது.

    Next Story
    ×