search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    எதிரிகளை அழித்து வெற்றியைத் தரும் பைரவர்
    X

    எதிரிகளை அழித்து வெற்றியைத் தரும் பைரவர்

    • தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.
    • பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.

    பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி.

    அஷ்டமி நாளில், எந்தக் காரியம் செய்யாவிட்டாலும் பைரவரை வழிபடுவது மிகவும் பலத்தைக் கொடுக்கும்.

    தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு தேய்பிறை அஷ்ட மியிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் ஆலயங்களில் நடைபெறும்.

    அதே போல், அஷ்டமி நாளில், சில ஆலயங்களில், ராகுகாலத்தில் பைரவருக்கு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுவது வழக்கம்.

    பொதுவாகவே ராகுகால வேளையில் விளக்கேற்றி துர்கை பூஜை செய்வது மகத்துவமானது என்பார்கள்.

    அப்போது துர்காதேவியை நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அஷ்டமியன்று, துர்கா தேவியுடன் அஷ்டமிக்கு உரியவரான பைரவரை மனதார வழிபட்டால், மகத்தான பலன்கள் நிச்சயம்.

    கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. கால பைரவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் அனைத்தும் தெறித்து ஓடிவிடும்.

    கண்ணுக்குத் தெரிகிற, கண்ணுக்கே தெரியாத எதிரிகள் எல்லோரும் வீரியம் இழந்து போவார்கள்.

    பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ... அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.

    Next Story
    ×