search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    என்னென்ன அபிஷேகம் என்னென்ன பலன்?
    X

    என்னென்ன அபிஷேகம் என்னென்ன பலன்?

    • ழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம்.
    • இதனால் நம் மனம் குளிர்வது போல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும்.

    இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான்.

    அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

    குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம்.

    இதனால் நம் மனம் குளிர்வது போல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும்.

    சரி விநாயகருக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

    நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.

    தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.

    பால் அபிஷேகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.

    மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம் உண்டாகும்.

    தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.

    கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.

    அரிசி மாவுப்பொடி அபிஷேகம்:

    லட்சுமி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.

    சந்தன அபிஷேகம்: உடல் குளிர்ச்சி பெறும். மனத்திற்கு அமைதி கிடைக்கும். செல்வங்கள் பெருகும்.

    சொர்ண அபிஷேகம்: நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்.

    இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தால்: கௌரவம் காக்கப்படும்.

    எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் போக்கும், துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.

    மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொருங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.

    இனிமையான குரல் வளம் பெற....

    நன்றாக பாடுவதற்கு, அதுவும் சங்கீதம் பாட இனிமையான குரல் வேண்டும். இதற்கு தினமும் பாடி பயிற்சி செய்ய வேண்டும்.

    பயிற்சி செய்தாலும் பலன் வருவதற்கு இறைவனின் அருள் வேண்டும் அல்லவா.

    விதைப்பதை அறுவடை செய்ய பகவான் துணை இருந்தால்தான் அறுவடை செய்ய முடியும் என்பார்கள்.

    அதுபோலதான். இறைவனை வணங்கி இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குரல் இனிமை பெறும்.

    தியாகராஜ சுவாமிகளுக்கு செய்யும் தேன் அபிஷேகத்தை பிரசாதமாக சாப்பிட்டாலும், சுவாமிகளின் அருளாசியால் குரல் இனிமையாக இருக்கும்.

    Next Story
    ×