search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏகாதசி விரத நியதிகள்
    X

    ஏகாதசி விரத நியதிகள்

    • ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, வழிபாடு செய்ய வேண்டும்.
    • ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது.

    ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, வழிபாடு செய்ய வேண்டும்.

    ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.

    முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

    முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

    ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும்.

    கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும்.

    துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும்.

    ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது.

    அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

    Next Story
    ×