search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆச்சரியப்படுத்தும் அண்ணாமலையார் ஆலய செப்பு சிலைகள்
    X

    ஆச்சரியப்படுத்தும் அண்ணாமலையார் ஆலய செப்பு சிலைகள்

    • பொதுவாக உற்சவர் சிலைகள் கல்சிலைகளாக இருக்காது. உலோகத்தாலான சிலைகளாகவே இருக்கும்.
    • சில சிலைகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆலய கருவறைகளில் கல்லால் அமைக்கப்பட்ட மூலவர் சிலைகள் இடம் பெற்றிருக்கும்.

    அந்த சிலைகளை ஒருபோதும் வெளியில் கொண்டுவர முடியாது.

    ஆலயங்களில் உற்சவம் நடைபெறும் போது சுவாமி திருவீதி உலா நடத்துவார்கள்.

    அந்த சமயங்களில் கருவறை மூலவருக்கு பதில் உற்சவர் திருவீதி உலா வருவார்.

    அப்படி வரும் உற்சவருக்கு மூலவருக்குரிய அனைத்து ஆற்றல்களும் நிரம்ப இருக்கும்.

    எனவே தான் உற்சவர் சிலைகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

    பொதுவாக உற்சவர் சிலைகள் கல்சிலைகளாக இருக்காது.

    உலோகத்தாலான சிலைகளாகவே இருக்கும்.

    ஐம்பொன் சிலைகள், செப்பு சிலைகள் என்று உற்சவர் சிலைகளை வடிவமைப்பார்கள்.

    அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் 40க்கும் மேற்பட்ட செப்பு சிலைகள் இருக்கின்றன.

    இந்த சிலைகளில் பெரும்பாலானவை பஞ்சலோகங்களால் தயாரிக்கப்பட்டவை.

    அண்ணாமலையார் ஆலயத்தின் பழமையான செல்வ சிறப்பாக இவை கருத்தப்படுகின்றன.

    இங்குள்ள செப்பு சிலைகள் சோழர் காலத்தில் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு காலக்கட்டங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    இந்த பஞ்சலோக சிலைகளில் அதிக அளவு தாமிரம் சேர்க்கப்பட்டுள்ளதால் சிலைகள் அனைத்தும் சிவந்த நிறத்திலேயே காணப்படுகின்றன.

    பீடங்களுடன் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையில் இருக்கும் இந்த சிலைகள் உற்சவ காலங்களில் ஆடை, அலங்காரங்களுடன் வெளியில் வரும்போது பிரமிப்பை ஏற்படுத்தும்.

    சில சிலைகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    விநாயகர், பிட்சாடனார் சிலைகள் தங்க மூலாம் பூசப்பட்டுள்ளன.

    முன்பு இந்த சிலைகள் பொக்கிஷமேடை அறையில் வைக்கப்பட்டிருந்தன.

    தற்போது இந்த செப்பு சிலைகள் அனைத்தும் ஐந்தாம் பிரகாரத்தில் தனி அரங்கு கட்டப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    சில ஐம்பொன் சிலைகள் உற்சவ விழாக்காலங்களில் கூட வெளியில் வருவதில்லை.

    பயன்படுத்தப்படாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.

    அர்த்தநாரீஸ்வரர், அறுபத்து மூவர் ஆகியோரது செப்பு சிலைகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வெளியில் வந்து செல்கின்றன.

    Next Story
    ×