என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மூன்று பிரைமரி கேமரா சியோமி ஸ்மார்ட்போன் டீசர்
Byமாலை மலர்9 May 2019 4:16 AM GMT (Updated: 9 May 2019 4:16 AM GMT)
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. #Xiaomi
சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் சியோமி புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், சியோமி மற்றொரு புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டிருக்கிறது. இந்த டீசரின் படி புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பது பற்றிய விவரம் இடம்பெற்றிருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
Met @Flipkart CEO Kalyan along with @leijun.#Flipkart has been an amazing partner of @XiaomiIndia since 2014. Our India launch was on Flipkart & it crashed during our 1st sale!😜 Our partnership is a bombshell 😁
— Manu Kumar Jain (@manukumarjain) May 8, 2019
Some amazing announcements coming your way! Stay tuned.#Xiaomipic.twitter.com/rDvkNGDdVz
சியோமியின் மனு குமார் ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ஆகியோர் ப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரியை சந்தித்ததை மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றை அறிவிக்க இருப்பதாகவும் இதில் வெற்றி பெறுவோர் Mi 9 ஸ்மார்ட்போனை வென்றிட முடியும் என சியோமி தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X