search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கி அசத்திய பூர்விகா
    X

    வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கி அசத்திய பூர்விகா

    இந்தியாவின் முன்னணி மொபைல் போன் விற்பனையாளராக இருக்கும் பூர்விகா மொபைல்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறது. #offers



    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூர்விகா மொபைல்ஸ் ஷோரூம்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை பூர்விகா மொபைல்ஸ் வழங்கியது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூர்விகா விற்பனையகங்களில், நவம்பர் 7ம் தேதி வரை, 'தீபாவளி பரிசு மழை' சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. 

    இதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு கார், புல்லட், ஸ்கூட்டி உள்ளிட்ட ரூ.5 கோடி மதிப்பிலான பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.



    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட மொபைல் போன் மாடல்களுக்கு, 20 சதவீத வரை கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொபைல் மாடல்களில் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், 60 சதவிகிதம் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ஒருமுறை ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் ஆபர் போன்ற சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

    மேலும், வாடிக்கையாளர்களுக்கு, பூர்விகா மொபைல்ஸ் குறித்து, வாசகம் எழுதும் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது; 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள மொபைல் போன் வாங்குவோர், இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
    Next Story
    ×