search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    300 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை

    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈத் முபாரக் எஸ்டிவி 786 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும்.

    மொத்தத்தில் ரூ.786 பிஎஸ்என்எல் சலுகையில் பயனர்களுக்கு 300 ஜிபி டேட்டா, 15,000 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக 2018 உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு தினமும் 4ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை பிஎஸ்என்எல் அறவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


    கோப்பு படம்

    பிஎஸ்என்எல் சலுகையை பயனர்கள் ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு பிஎஸ்என்எல் 786 சலுகையில் தினமும் 3 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்பட்டது. இத்துடன் 786 வாய்ஸ் கால் பேலன்ஸ் வழங்கப்பட்டது, எனினும் எஸ்எம்எஸ் சேவை வழங்கப்படவில்லை.

    முன்னதாக ரூ.149 விலையில் பிஎஸ்என்எல் அறிவித்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 2018 உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு பிஎஸ்என்எல் அறிவித்த புதிய சலுகை ஃபிஃபா உலக கோப்பை சிறப்பு டேட்டா எஸ்டிவி 149 (FIFA World Cup Special Data STV 149) என அழைக்கப்படுகிறது.

    ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.149 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×