search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: மைக்ரோசாஃப்ட்
    X
    கோப்பு படம்: மைக்ரோசாஃப்ட்

    தப்பு கண்டுபிடித்தால் ரூ. 1.6 கோடி வழங்கும் மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்ட் சார்பில் குறுகிய காலத்தில் பிழையை கண்டறியும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெவலப்பர்களுக்கு அதிகபட்சம் ரூ.1.6 கோடி வரை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    மெல்ட்-டவுன் மற்றும் ஸ்பெக்டர் போன்ற புதிய பிழைகளை கண்டறியும் டெவலப்பர்களுக்கு 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.6 கோடி) வரை வழங்குவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் சைடு-சேனல் பிழைகளை கண்டறியும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு புதிய வகையான பிழைகள் ஜனவரி 2018-இல் அறிவிக்கப்பட்டு, இதுபோன்ற ஆய்வுகளில் மிகமுக்கிய வளர்ச்சியாக இருக்கிறது என மைக்ரோசாஃப்ட் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுருக்கிறது. அதிகப்படியான அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளதால், புதிய வகை பிழைகளை கண்டறிய புதிய பக் பவுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

    ஸ்பெகுலேட்டிவ் எக்சிகியூஷன் எனும் புதிய வகை பிழைகளை கண்டறிவதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டிருக்கலாம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிலிப் மிஸ்னர் தெரிவித்துள்ளார். புதிய பிழை கண்டறியும் திட்டம் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

    ஹேக்கிங் செய்யக்கூடிய பிழை இருப்பதை இன்டெல் சமீபத்தில் உறுதி செய்திருந்தது. பாதுகாப்பு வல்லுநர்களின் படி ஸ்பெக்டர் மற்றும் மெல்ட் டவுன் பெயரில் சிபியு அளவிலான பிழை இன்டெல் கடந்த இரண்டு தசாப்தங்களில் உருவாக்கிய சிப்செட்களிலும், ஏ.எம்.டி மற்றும் ஏ.ஆர்.எம். ஹோல்டிங் தயாரித்திருக்கும் சிப்செட்களை பாதித்து இருக்கிறது.

    பிரச்சனையை ஏற்படுத்தும் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு பேட்ச்களை அப்டேட் மூலம் வழங்கி வருகின்றன.
    Next Story
    ×