என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி, 14 பேர் காயம்
Byமாலை மலர்4 Jun 2019 10:36 AM GMT (Updated: 4 Jun 2019 10:36 AM GMT)
ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்தவேளையில் மசூதி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 செய்தியாளர்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகை முடித்து மக்கள் மசூதியை விட்டு வெளியே வரும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை. இதேபோல் கடந்த மாதம் பக்லான் மாகாணத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்தின்மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ரமலான் மாதத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்தவேளையில் மசூதி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 செய்தியாளர்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகை முடித்து மக்கள் மசூதியை விட்டு வெளியே வரும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை. இதேபோல் கடந்த மாதம் பக்லான் மாகாணத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்தின்மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ரமலான் மாதத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X