search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் மர்ப நபர் துப்பாக்கிச் சூடு- இந்தியர் பலி
    X

    அமெரிக்காவில் மர்ப நபர் துப்பாக்கிச் சூடு- இந்தியர் பலி

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானார். #IndiandeadatUS
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென உள்ளே நுழைந்தார். கடையில் மேலாளர் கோவர்தன் ரெட்டி (வயது 48) மட்டும் இருந்துள்ளார். அவரை மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இந்த தாக்குதலில் கோவர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பணத்தையோ, விலை உயர்ந்த பொருட்களையோ திருடிச் செல்லவில்லை. எனவே, வேறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

    இச்சம்பவத்தில் பலியான கோவர்தன் தெலுங்கானா மாநிலத்தின் யாததிரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குப் பணிக்காகச் சென்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கோவர்தன் உடலை இந்தியா கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அங்குள்ள தெலுங்கு அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USShooting #IndianShotDead

    Next Story
    ×