search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி
    X

    பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி

    இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. #SriLanka #SriLankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் உள்பட 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.



    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளன.  

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அதன்பின் நீதிபதிகள் அனைவரும் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்தனர். அதன் விவரம் வருமாறு:

    இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அதிரடியாக தெரிவித்துள்ளது. #SriLanka #SriLankaParliament
    Next Story
    ×