search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்பணித்தது தென் கொரியா
    X

    முதல் ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்பணித்தது தென் கொரியா

    700 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்ட தனது முதல் ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இன்று அர்பணித்தது வைத்தார். #SouthKorea
    சியோல்:

    பரம எதிரியாக இருந்த வடகொரியா உடன் சமீபத்தில் சமரசம் செய்து கொண்ட தென் கொரியா, கொரிய தீபகற்பத்தில் தனது ராணுவ பலத்தை காட்டும் விதமாக ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலை இன்று கடற்படையில் இணைத்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், 3 ஆயிரம் டன் எடையில் கட்டப்பட்ட தோஷன் ஆங் சாங்-ஹோ என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கியை அதிபர் மூன் ஜேஇன் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    சிறிய ரக மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்த நீர்மூழ்கியில் இருந்து ஏவ இயலும். நாட்டின் பாதுகாப்பை இந்த நீர்மூழ்கி ஒருபடி மேலே கொண்டு செல்லும் என அதிபர் மூன் பெருமிதமாக தெரிவித்துள்ளார். இந்த நீர்மூழ்கியை போல இன்னும் 2 நீர்மூழ்கி கட்டப்பட்டு வருவதாகவும் அடுத்த 5 ஆண்டில் கடற்படையில் இணைக்கப்படும் என அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×