search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் - அமெரிக்கா விமானத்தில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடல்நலக்குறைவு
    X

    துபாய் - அமெரிக்கா விமானத்தில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடல்நலக்குறைவு

    துபாயிலிருந்து அமெரிக்கா சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlyEmirates
    நியூயார்க்:

    துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் இன்று நியூயார் ஜே.எப்.கே விமான நிலையத்தில் தரையிறங்கியது. சுமார் 521 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில் 100-க்கும் அதிகமான பயணிகள் தங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த இந்த விமானம் துபாயிலிருந்து கிளம்பும் போது 10 பயணிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூற அவர்கள், விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். எனினும், எதற்காக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
    Next Story
    ×