search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான்கான் மீது ஊழல் புகார்: 7-ந்தேதி ஆஜராக கோர்ட்டு சம்மன்
    X

    இம்ரான்கான் மீது ஊழல் புகார்: 7-ந்தேதி ஆஜராக கோர்ட்டு சம்மன்

    பாகிஸ்தானில் அரசு ஹெலிகாப்டரை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் 7-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெக்ரிக்-இ -இன் சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் வருகிற 11-ந்தேதி அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் இவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆட்சி நடத்தியது.

    அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 72 மணி நேரம் உபயோகித்து இருப்பதாகவும் அதற்குரிய வாடகை கட்டணம் ரூ.2 கோடியே 17 லட்சம் செலுத்தவில்லை என்றும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய பொறுப்புடமை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இம்ரான்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    தேர்தல் பணியில் இருந்ததால் அவர் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் ஆஜரானார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 7-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

    கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரியாக பெர்வேஷ்கட்டாக் பதவி வகித்தார். அவர் மற்றும் 4 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். #ImranKhan
    Next Story
    ×