என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் - பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்க தலைவர் மீது முட்டை வீச்சு
Byமாலை மலர்16 July 2018 7:01 PM GMT (Updated: 16 July 2018 7:01 PM GMT)
பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் மீது முட்டை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Karachi #FarooqSattar
கராச்சி:
பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் மீது முட்டை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் பரூக் சத்தார் நேற்று கலந்து கொண்டார்.
பிரசாரத்தில் சத்தார் பேச ஆரம்பித்த போது அங்கு வந்த சில பெண்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர் உடனே அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது பரூக் சத்தார் மீது சிலர் முட்டைகளை வீசினர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் மூத்த தலைவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #Karachi #FarooqSattar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X