search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம் - சாலை விபத்தில் 6 பேர் பலி
    X

    வங்காளதேசம் - சாலை விபத்தில் 6 பேர் பலி

    வங்காளதேசத்தில் காரும் ஆட்டோ ரிக்‌ஷாவும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    டாக்கா:

    வங்காளதேசத்தின் மவுல்விபசார் மாவட்டத்தில் நடாம்பூர் பகுதியில் அமைந்துள்ளது மவுல்விபசார் - சிதெட் நெடுஞ்சாலை.

    இந்த நெடுஞ்சாலையில் இன்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்த காரும் ஆட்டோ ரிக்‌ஷாவும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம்  அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
    Next Story
    ×