search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 நிமிடம் மட்டுமே நீடித்த கணவன்-மனைவி பந்தம்
    X

    15 நிமிடம் மட்டுமே நீடித்த கணவன்-மனைவி பந்தம்

    துபாயில் திருமணம் செய்துகொண்ட 15 நிமிடத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
    துபாய்:

    துபாய் மணமகன் ஒருவர்  20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என மணமகளின் தந்தையுடன் கூறியுள்ளார்.

    இதற்கு மணமகளின் தந்தை சம்மதம் தெரிவித்ததையடுத்து, அனைவர் முன்னிலையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடனேயே பணத்தை தருமாறு மணமகளின் தந்தை கேட்டுள்ளார்.

    அப்போது மணமகன் பேசிய தொகையை கொடுக்காமல் பாதி தொகையான 10,000 பவுண்ட்ஸ் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட அவர், பொறுமையிழந்து அனைவர் முன்னிலையிலும் சண்டைபோட்டுள்ளார். இந்த சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி, மணமகன் திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார்.
    Next Story
    ×