search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரிய தலைவருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் டிரம்ப்
    X

    வடகொரிய தலைவருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் டிரம்ப்

    சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்த டொனால்ட் டிரம்ப்- கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #TrumpKimSubmit #KimJongUn #DonaldTrump
    வாஷிங்டன் :

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.



    அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

    இதுதொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும். இப்போது அது நடக்கவில்லை என்றாலும், சில காலத்திற்கு பின்னர் நடக்கலாம். சிங்கப்பூர் சந்திப்பு வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் இது வேலை செய்யாது என்பதல்ல. ஆனால், ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில்,  வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்-க்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கடிதம் எழுதியுள்ளளார். அதில், அவர்கள் இருவருக்கும் இடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அவர் குறிப்பிட்டுள்ளார். #TrumpKimSubmit #KimJongUn #DonaldTrump
    Next Story
    ×