என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாண்டரினை ஆட்சிமொழியாக்க பாகிஸ்தான் செனட் சபை ஒப்புதல்
Byமாலை மலர்20 Feb 2018 1:20 AM GMT (Updated: 20 Feb 2018 1:20 AM GMT)
பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக மாண்டரினை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. #Pakistan #Mandarin #officiallanguage
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக மாண்டரினை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஆட்சிமொழியாக உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளன. இந்நிலையில், சீன மொழியான மாண்டரினை பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக அங்கீகரிப்பதற்கான தீர்மானம் அந்நாட்டின் செனட் சபையில் நேற்று கொண்டுவரப்பட்டது.
இதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் உருது, ஆங்கிலத்தை தொடர்ந்து மாண்டரினும் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக உள்ளது. மாண்டரின் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாவதன் மூலம் இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவு மேலும் ஆழமடைந்து, பொருளாதார வளர்ச்சி மேம்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது, “கடந்த 70 ஆண்டுகளில், பாகிஸ்தான் மக்களுடைய தாய் மொழியாக இல்லாத நான்கு மொழிகளுக்கு ஊக்கமளித்துள்ளது - ஆங்கிலம், உருது, அரபிக் மற்றும் இப்போது மாண்டரின் - சொந்த மொழிகளை தவிர்த்து”.
பாகிஸ்தானில் பரவலாக பேசப்படும் பஞ்சாபி, பாஷ்டோ மற்றும் பிற வட்டார மொழிகள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #Mandarin #officiallanguage #tamilnews
பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக மாண்டரினை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஆட்சிமொழியாக உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளன. இந்நிலையில், சீன மொழியான மாண்டரினை பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக அங்கீகரிப்பதற்கான தீர்மானம் அந்நாட்டின் செனட் சபையில் நேற்று கொண்டுவரப்பட்டது.
இதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் உருது, ஆங்கிலத்தை தொடர்ந்து மாண்டரினும் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக உள்ளது. மாண்டரின் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாவதன் மூலம் இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவு மேலும் ஆழமடைந்து, பொருளாதார வளர்ச்சி மேம்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது, “கடந்த 70 ஆண்டுகளில், பாகிஸ்தான் மக்களுடைய தாய் மொழியாக இல்லாத நான்கு மொழிகளுக்கு ஊக்கமளித்துள்ளது - ஆங்கிலம், உருது, அரபிக் மற்றும் இப்போது மாண்டரின் - சொந்த மொழிகளை தவிர்த்து”.
பாகிஸ்தானில் பரவலாக பேசப்படும் பஞ்சாபி, பாஷ்டோ மற்றும் பிற வட்டார மொழிகள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #Mandarin #officiallanguage #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X