search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் போலீஸ் வாகனம் சிக்கியது - 5 பேர் பலி
    X

    பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் போலீஸ் வாகனம் சிக்கியது - 5 பேர் பலி

    பாகிஸ்தானின் குயிட்டா-சிபி சாலையில் உள்ள சரியாப் மில் பகுதியில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஐந்து போலீசார் உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்: 

    பாகிஸ்தானின் குயிட்டா-சிபி சாலையில் உள்ள சரியாப் மில் பகுதியில் இன்று காலை போலீஸ் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தீடிரென பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டுவெடித்தது. 

    இந்த குண்டுவெடிப்பில் அந்த ராணுவ வாகனம் சிக்கியது. இதில் 5 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வேறு எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

    இப்பகுதியில் சமீப காலமாக போலீஸ் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×