என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் முக்கிய விருது நிகழ்ச்சியை தவிர்க்கும் டிரம்ப் - சமீபத்திய இனவெறி மோதல்கள் காரணமா?
Byமாலை மலர்20 Aug 2017 12:39 AM GMT (Updated: 20 Aug 2017 12:39 AM GMT)
அமெரிக்காவின் முக்கிய கென்னடி விருது விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பங்கேற்க மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முக்கிய கென்னடி விருது விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பங்கேற்க மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலைத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்காக மறைந்த முன்னாள் அதிபர் கென்னடி பெயரால் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படும். அமெரிக்காவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த விருது வழங்கும் விழாவில் அதிபர் மற்றும் அதிபரின் மனைவி ஆகியோர் கலந்து கொள்வர்.
ஆனால், இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கலந்து கொள்ளமாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெர்ஜீனியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற இனமோதல்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்த டிரம்ப், இனவெறி எதிர்ப்பாளர்களையும் கடுமையாக சாடியிருந்தார்.
இதனால், பலர் டிரம்ப்பை சரமாரியாக விமர்சித்து வந்தனர். மேலும், விருதுகளுக்கான நிதியையும் டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பட்ஜெட்டில் குறைத்து விட்டதாக கூறி பல்வேறு கலைஞர்கள் டிரம்ப்பை குற்றம் சாட்டியிருந்தனர். இந்த சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் இந்த விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறிவருகின்றன.
அமெரிக்காவின் முக்கிய கென்னடி விருது விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பங்கேற்க மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலைத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்காக மறைந்த முன்னாள் அதிபர் கென்னடி பெயரால் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படும். அமெரிக்காவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த விருது வழங்கும் விழாவில் அதிபர் மற்றும் அதிபரின் மனைவி ஆகியோர் கலந்து கொள்வர்.
ஆனால், இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கலந்து கொள்ளமாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெர்ஜீனியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற இனமோதல்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்த டிரம்ப், இனவெறி எதிர்ப்பாளர்களையும் கடுமையாக சாடியிருந்தார்.
இதனால், பலர் டிரம்ப்பை சரமாரியாக விமர்சித்து வந்தனர். மேலும், விருதுகளுக்கான நிதியையும் டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பட்ஜெட்டில் குறைத்து விட்டதாக கூறி பல்வேறு கலைஞர்கள் டிரம்ப்பை குற்றம் சாட்டியிருந்தனர். இந்த சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் இந்த விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறிவருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X