என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 30 பேர் பலி
Byமாலை மலர்25 May 2017 12:00 AM GMT (Updated: 25 May 2017 12:26 AM GMT)
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோம்:
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளைகுடா நாடுகளில் இருந்து உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பில்லாத படகு பயணங்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொள்வதால் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது.
இந்நிலையில், லிபியாவில் இருந்து சுமார் 500 முதல் 700 பேர் அகதிகளாக மத்திய தரைக்கடலில் மரப்படகு மூலம் ஐரோப்பிய நாடான இத்தாலியை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். லிபியா கடல் எல்லையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நேற்று படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில், படகிலிருந்த 200 பேர் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 3 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கும் பணியில் இத்தாலிய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளைகுடா நாடுகளில் இருந்து உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பில்லாத படகு பயணங்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொள்வதால் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது.
இந்நிலையில், லிபியாவில் இருந்து சுமார் 500 முதல் 700 பேர் அகதிகளாக மத்திய தரைக்கடலில் மரப்படகு மூலம் ஐரோப்பிய நாடான இத்தாலியை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். லிபியா கடல் எல்லையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நேற்று படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில், படகிலிருந்த 200 பேர் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 3 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கும் பணியில் இத்தாலிய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X