என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வானூர் அருகே லாரி டிரைவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்1 Jun 2019 10:48 AM GMT (Updated: 1 Jun 2019 10:48 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே லாரி டிரைவர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது ராயபேட்டை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 37) மினி லாரி டிரைவர்.
இவரது மனைவி கீதா (34) இவர் நிறைமாத கர்பிணியாக உள்ளார். பிரசவத்திற்காக திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று இருந்தார்.
இதனை தொடர்ந்து குமரன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். இதை அறிந்த மர்மநபர்கள் குமரன் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு பீரோவை திறக்க முயன்றனர்.
முடியாதால் பீரோவை வீட்டுக்கு வெளியே உள்ள சவுக்கு தோப்புக்கு கொண்டு சென்றனர்.
அங்குவைத்து பீரோவை உடைத்தனர். அதில் இருந்த ரூ 1 லட்சம் ரொக்க பணம் 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்றனர்.
இன்று காலை குமரன் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் குமரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குமரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்குள்ள பொருட்கள் சிதறிகிடந்தன.
மேலும் வீட்டில் இருந்த பீரோ அருகில் சவுக்குதோப்பில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து குமரன் ஆரோவில் போலீசில் புகார்செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற கொளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது ராயபேட்டை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 37) மினி லாரி டிரைவர்.
இவரது மனைவி கீதா (34) இவர் நிறைமாத கர்பிணியாக உள்ளார். பிரசவத்திற்காக திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று இருந்தார்.
இதனை தொடர்ந்து குமரன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். இதை அறிந்த மர்மநபர்கள் குமரன் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு பீரோவை திறக்க முயன்றனர்.
முடியாதால் பீரோவை வீட்டுக்கு வெளியே உள்ள சவுக்கு தோப்புக்கு கொண்டு சென்றனர்.
அங்குவைத்து பீரோவை உடைத்தனர். அதில் இருந்த ரூ 1 லட்சம் ரொக்க பணம் 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்றனர்.
இன்று காலை குமரன் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் குமரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குமரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்குள்ள பொருட்கள் சிதறிகிடந்தன.
மேலும் வீட்டில் இருந்த பீரோ அருகில் சவுக்குதோப்பில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து குமரன் ஆரோவில் போலீசில் புகார்செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற கொளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X