என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் மனைவி கழுத்தை அறுத்த சம்பவம் - சிகிச்சை பலனின்றி 2வது மனைவி உயிரிழப்பு
Byமாலை மலர்17 May 2019 3:35 AM GMT (Updated: 17 May 2019 3:35 AM GMT)
முதல் மனைவி கழுத்தை அறுத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி 2-வது மனைவி உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றம்:
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் முகம்மதுரஷீத். இறைச்சி கடை ஊழியர். இவருடைய முதல் மனைவி சுராகாத்தூண் (வயது 28). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வங்காள தேசத்தை சேர்ந்த இவர், தனது உறவினரான ஜெரினாபேகம்(25) என்பவரை தனது கணவருக்கு 2-வதாக திருமணம் செய்து வைத்தார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது ஜெரினாபேகம் 5 மாத கர்ப்பமாக இருந்தார்.
திருமணத்துக்கு பிறகு முகமதுரஷீத் 2-வது மனைவி மீது அதிக பாசமாக இருந்ததால் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 12-ந்தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுராகாத்தூண், வீட்டில் இருந்த கத்தியால் ஜெரினாபேகத்தின் கழுத்தை அறுத்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராகாத்தூணை கைது செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெரினாபேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் முகம்மதுரஷீத். இறைச்சி கடை ஊழியர். இவருடைய முதல் மனைவி சுராகாத்தூண் (வயது 28). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வங்காள தேசத்தை சேர்ந்த இவர், தனது உறவினரான ஜெரினாபேகம்(25) என்பவரை தனது கணவருக்கு 2-வதாக திருமணம் செய்து வைத்தார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது ஜெரினாபேகம் 5 மாத கர்ப்பமாக இருந்தார்.
திருமணத்துக்கு பிறகு முகமதுரஷீத் 2-வது மனைவி மீது அதிக பாசமாக இருந்ததால் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 12-ந்தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுராகாத்தூண், வீட்டில் இருந்த கத்தியால் ஜெரினாபேகத்தின் கழுத்தை அறுத்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராகாத்தூணை கைது செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெரினாபேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X