என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 மாதங்களுக்கு பிறகு கோதண்டராமர் சிலை பெங்களூரு புறப்பட்டது
Byமாலை மலர்4 May 2019 4:25 AM GMT (Updated: 4 May 2019 4:25 AM GMT)
தற்காலிக பாதை அனைத்தும் அமைக்கப்பட்டு விட்டதால் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது. #KothandaramanStatue
ஓசூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 64 அடி உயரம் மற்றும் 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலை, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா என்ற இடத்தில் 108 அடி உயரத்தில் நிறுவப்படுவதற்காக பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டது.
வழியில் பல்வேறு ஊர்களில், பல்வேறு தடைகளை தாண்டி, கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு வந்தது. அங்கிருந்து பெங்களூரு செல்லும் வழித்தடங்களில் உள்ள தரைப்பாலங்களை கடந்து செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.
இந்தநிலையில், தற்காலிக பாதை அனைத்தும் அமைக்கப்பட்டு விட்டதால் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட லாரி இரவு சூளகிரி அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது திடீரென லாரியின் சில டயர்கள் பஞ்சர் ஆனது. இதன் காரணமாக லாரி அங்கு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வேறு டயர் மாற்றும் பணி நடைபெற்றது. #KothandaramanStatue
திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 64 அடி உயரம் மற்றும் 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலை, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா என்ற இடத்தில் 108 அடி உயரத்தில் நிறுவப்படுவதற்காக பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டது.
வழியில் பல்வேறு ஊர்களில், பல்வேறு தடைகளை தாண்டி, கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு வந்தது. அங்கிருந்து பெங்களூரு செல்லும் வழித்தடங்களில் உள்ள தரைப்பாலங்களை கடந்து செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.
இந்தநிலையில், தற்காலிக பாதை அனைத்தும் அமைக்கப்பட்டு விட்டதால் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட லாரி இரவு சூளகிரி அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது திடீரென லாரியின் சில டயர்கள் பஞ்சர் ஆனது. இதன் காரணமாக லாரி அங்கு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வேறு டயர் மாற்றும் பணி நடைபெற்றது. #KothandaramanStatue
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X