search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதண்டராமர் சிலை"

    சூளகிரியை அடுத்த சாமல்பள்ளம் முனீஸ்வரன் கோவில் அருகே கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் தற்காலிக சாலை அமைக்க சிலை அமைப்பு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #Vishnustatue
    சூளகிரி:

    கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இரந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றது.

    கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்றது. ஆனால் லாரியின் டயர்கள் அந்த மண்ணில் புதைந்து தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    பின்னர் அந்த சாலையில் மீண்டும் ஜல்லிக்கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கினர். அதன்பின், 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால் சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால் தொடர்ந்து சிலை ஏற்றப்பட்ட லாரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அந்த லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு கார்கோ என்ஜின்கள் 3 மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்ட பின்னர் லாரி புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையை சென்றடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். அங்கிருந்து புறப்பட்ட லாரி மேலுமலை கணவாய் வழியாக சாமல்பள்ளம் வரை சென்றது. அங்கு முனீஸ்வரன் கோவில் அருகே சிலை உள்ள கார்கோ லாரி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இன்று (9-ந் தேதி) காலை ஓசூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேரில் வந்து கோதண்ட ராமரை வழிபட்டனர். இன்னும் இந்த சிலை சாமல் பள்ளம் மற்றும் சின்னாறு ஆகிய பகுதிகளில் உள்ள 2 பாலங்களை கடக்க வேண்டியது உள்ளது. இந்த பாலங்கள் வழியாக சிலை உள்ள கார்கோ லாரி சென்றால் பாலங்கள் இடிந்து விழும் என்றும், எனவே மாற்றுப்பாதை அமைத்து சிலையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று சிலை அமைப்பு குழுவினர் சாமல்பள்ளம் மற்றும் சின்னாறு பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள ஓடைகளில் தற்காலிக பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். தற்காலிக பாதை அமைத்த பிறகு சிலை உள்ள லாரி பெங்களூரு நோக்கி புறப்படும் என்று சிலை அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    சாமல்பள்ளத்தில் இருந்து சிலை புறப்பட இன்னும் 4 நாட்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #Vishnustatue


    ஊத்தங்கரை அருகே கோதண்டராமர் சிலை கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கோதண்டராமர் சிலை ஊத்தங்கரை நான்கு முனைசந்திப்பு வழியாக பெங்களூரு கொண்டு செல்ல இருக்கிறது.

    இந்த நிலையில் சிலையை கொண்டுசெல்ல ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை ரவுண்டானா இடையூறாக இருப்பதாக கூறி அதனை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர், மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தண்ணீர் கொடுக்காத கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் கனிமவளம் மட்டும் வேண்டுமா? என முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர். 

    பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஊத்தங்கரை டி.எஸ்.பி.யிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
    கோதண்டராமர் சிலை ஏற்றி வந்த லாரிக்கு அதிக எடை தாங்கும் பிரத்யேகமான புதிய தொழில்நுட்பங்களை கொண்ட டயர்கள் மும்பையிலிருந்து வரவழைத்து பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Vishnustatue
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாள் சிலை பெங்களூஐரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை முழுமையாக செதுக்கி முடிக்கப்பட்டு 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்திற்கு கோதண்டராமர் சிலை கடந்த 8-ந்தேதி வந்தடைந்தது. திருவண்ணாமலையிலிருந்து செங்கம் நோக்கி கோதண்டராமர் சிலை வந்தபோது அம்மாபாளையம் ஆவின் பால் பவுடர் நிறுவனம் அருகே அடுத்தடுத்து 15 டயர்கள் வெடித்து பஞ்சர் ஆனது.

    இதனால் கோதண்டராமர் சிலையை கொண்டு வந்த லாரியை சிலை அமைப்பு குழுவினர் செங்கம் வட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் நிறுத்தி வைத்தனர்.

    மேலும் செங்கம் அம்மாபாளையம் முதல் செங்கம் அடுத்த அனந்தவாடி கிராமம் வரை சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.

    லாரிக்கு அதிக எடை தாங்கும் பிரத்யேகமான புதிய தொழில்நுட்பங்களை கொண்ட டயர்கள் மும்பையிலிருந்து வரவழைத்து பொருத்த ஏற்பாடு செய்துள்ளனர். பிரத்யேக டயர்கள் பொருத்திய பின்னர் லாரி புறப்பட்டு செல்லும் என சிலை அமைப்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதனால் கோதண்ட ராமர் சிலை பெங்களூரு செல்ல மேலும் கால அவகாசம் ஏற்படும் என தெரிகிறது.


    ×