என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் சிக்கியது
Byமாலை மலர்25 April 2019 11:00 AM GMT (Updated: 25 April 2019 11:00 AM GMT)
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தினந்தோறும் திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு மலிண்டோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் மலேசியாவிற்கு கடத்த இருந்த இருமல் மருந்து போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மர்ம பொருளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை சோதித்தபோது போதைப்பொருள் என்பது தெரியவந்தது.
அவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கடத்த இருந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.10 லட்சம் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர் அந்த பயணியை கைது செய்து தமிழகத்தில் இந்த போதைப்பொருள் எங்கிருந்து, யாரிடம் வாங்கப்பட்டது என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தினந்தோறும் திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு மலிண்டோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் மலேசியாவிற்கு கடத்த இருந்த இருமல் மருந்து போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மர்ம பொருளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை சோதித்தபோது போதைப்பொருள் என்பது தெரியவந்தது.
அவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கடத்த இருந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.10 லட்சம் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர் அந்த பயணியை கைது செய்து தமிழகத்தில் இந்த போதைப்பொருள் எங்கிருந்து, யாரிடம் வாங்கப்பட்டது என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X