search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பழுது - 3 மணிநேரத்துக்கு பின் தொடங்கிய வாக்குப்பதிவு
    X

    ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பழுது - 3 மணிநேரத்துக்கு பின் தொடங்கிய வாக்குப்பதிவு

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாக 3 மணிநேரத்துக்கு பின் வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElections2019
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கீழ ராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் திரளாக வந்து வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சித்தனர். எனினும் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து வேறு எந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரை வக்காளர்கள் காத்து நின்றனர். சில வாக்காளர்கள் ஓட்டு போட முடியாமல் திரும்பி சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால் காலை 10.40 மணிக்கு பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது. மெஞ்ஞானபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமானது. #LokSabhaElections2019

    Next Story
    ×