search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் திடீர் பள்ளம்
    X

    திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் திடீர் பள்ளம்

    திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவொற்றியூர்:

    வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டி ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைய கூடிய இடத்தில் இருந்த ராட்சத குடிநீர் குழாய்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் மாற்றப்பட்டன.

    இந்நிலையில் திருவொற்றியூர் மார்க்கெட் அருகே சாலையோரம் மாற்றப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் இருந்த இடத்தில் அதிகாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டு குழாய்கள் சுமார் 5 அடி ஆழத்திற்கு கீழே இறங்கின.

    இதனால் அப்பகுதியில் 15 நீளத்திற்கு பள்ளம் விழுந்தது அப்போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து ஏதும் ஏற்பட வில்லை

    இதையடுத்து மெட்ரோ ரெயில் பணி ஊழியர்கள் ஜே.சி.பி. மூலம் அந்தக் குடிநீர் குழாய்களை சரி செய்து பள்ளங்களை மூடி வருகின்றனர்.

    இதனால் அதிகாலை 2 மணி முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு எண்ணூர் கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்கிறது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

    Next Story
    ×