என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூர் தொகுதியில் போட்டியிட பாலகிருஷ்ணரெட்டி மனைவி விருப்பமனு
Byமாலை மலர்14 March 2019 9:17 AM GMT (Updated: 15 March 2019 4:32 AM GMT)
ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார். #LSPolls
சென்னை:
கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே கள்ளச்சாரயத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது அரசு பஸ்சின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.
அவர் மீதான வழக்கை விசாரித்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதனால் அவர் தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் (ஓசூர் தொகுதி) ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள ஓசூர் உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கிடையே ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து பாலகிருஷ்ணரெட்டி கூறும்போது, “எனது மனைவி 2006-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்துள்ளார். பொது வாழ்வில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.
ஓசூர் தொகுதியில் எனது மனைவி போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்றார். #LSPolls
கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே கள்ளச்சாரயத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது அரசு பஸ்சின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.
அவர் மீதான வழக்கை விசாரித்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதனால் அவர் தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் (ஓசூர் தொகுதி) ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள ஓசூர் உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கிடையே ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து பாலகிருஷ்ணரெட்டி கூறும்போது, “எனது மனைவி 2006-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்துள்ளார். பொது வாழ்வில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.
ஓசூர் தொகுதியில் எனது மனைவி போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்றார். #LSPolls
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X