search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "balakrishna reddy"

    பாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான மனுவை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    சென்னை:

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

    அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.

    தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.



    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை விசாரித்தனர்.

    இதற்கிடையே, நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க.வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில்  சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

    அதில், ஒசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்ய தடையில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகள் படி எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. இதையடுத்து, புகழேந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    பாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    சென்னை:

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

    அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.

    தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினர்.

    இந்நிலையில், நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க.வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார். #LSPolls
    சென்னை:

    கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே கள்ளச்சாரயத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது அரசு பஸ்சின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.

    அவர் மீதான வழக்கை விசாரித்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    இதனால் அவர் தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் (ஓசூர் தொகுதி) ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள ஓசூர் உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கிடையே ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து பாலகிருஷ்ணரெட்டி கூறும்போது, “எனது மனைவி 2006-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்துள்ளார். பொது வாழ்வில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.

    ஓசூர் தொகுதியில் எனது மனைவி போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்றார். #LSPolls
    மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCrelief #formerTNminister #BalakrishnaReddy
    புதுடெல்லி:

    மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் கள்ளச் சாராய விற்பனையை எதிர்த்து போராட்டம் கடந்த 1998-ல் நடைபெற்றபோது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது.

    இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.
     
    இந்த வழக்கில் 7-1-2019 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்திருந்தார்.



    இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து விலக்கு அளித்து இன்று உத்தரவிட்டுள்ளது. #SCrelief #formerTNminister #BalakrishnaReddy #BalakrishnaReddysurrender
    பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnaReddy

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களது பதவியை பறித்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

    இதனால் பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம் ஆகிய 18 தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இதன் காரணமாக தமிழக சட்டசபையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. இந்த 20 இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி சமீபத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அவரது மந்திரி பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு நகல் சட்டசபை செயலாளருக்கு சமீபத்தில் கிடைத்தது.


    இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு கடிதம் மூலம் இதை சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    ஓசூர் தொகுதியும் காலி இடம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் காலியான சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    21 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் இது மினி சட்டசபை தேர்தல் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் இந்த 21 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பது தெரிய வந்துவிடும்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.

    இது தொடர்பான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. #BalakrishnaReddy

    அரசு வழக்கறிஞர் வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது என, பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார். #MadrasHighCourt #BalakrishnaReddy
    சென்னை:

    1998ல் கள்ளச்சாராய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  அத்துடன் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன் மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றும், 72-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார். தன்னை குற்றவாளி என அறிவித்ததால் தகுதியிழப்பு ஏற்பட்டிருப்பதால் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியிழப்பு ஏற்படுகிறது என்பதற்காக தீர்ப்புக்கு எப்படி தடை கோர முடியும்? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

    அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கூட்டமாக சென்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்றே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், பாலகிருஷ்ண ரெட்டி மீது தனிப்பட்ட புகார் இல்லை என்றும் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு தவறு என்று கூறுவீர்களா? அரசு வழக்கறிஞர் காவல்துறை தரப்புக்காகத்தான் வாதாட வேண்டும்; வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள்’ என அறிவுறுத்தினார்.

    அத்துடன் காவல்துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

    தீர்ப்பு வெளியானதும் பதவி விலகிவிட்டதால் தனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி கேட்டுக்கொண்டார். வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, மதியம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். #MadrasHighCourt #BalakrishnaReddy

    பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #BalakrishnaReddy #Sengottaiyan
    சென்னை:

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த விளையாட்டு துறை பொறுப்பை கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது, செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #BalakrishnaReddy #Sengottaiyan
    ×