என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கீழக்கரையில் டாஸ்மாக் கடையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டை மாற்ற முயற்சி - 2 பேர் சிக்கினர்
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றபோது ஒருவர் ரூ.2 ஆயிரம் கொடுத்து மது கேட்டார்.
அதனை வாங்கிய விற்பனையாளர் செல்லத்துரைக்கு அந்த ரூபாய் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை பரிசோதித்த போது அந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு என தெரியவந்தது.
இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு, விற்பனையாளர் செல்லத்துரை தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்தவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவரது பெயர் முகமது ரியாஸ் (வயது 50) என்பதும் கீழக்கரை சேரன் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொழிலாளியான அவர், வடக்குத் தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவரிடம் அந்த ரூபாயை வாங்கியதாக தெரிவித்தார்.
அதன் பேரில் சுதாகரை போலீசார் பிடித்தனர். கள்ள ரூபாய் நோட்டு குறித்து 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்