search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் அருகே இன்று விபத்து- டிராக்டர் மீது லாரி மோதி கிளீனர் பலி
    X

    வேப்பூர் அருகே இன்று விபத்து- டிராக்டர் மீது லாரி மோதி கிளீனர் பலி

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவர் நேற்று இரவு வாடிபட்டியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் டிராக்டரை சென்னையை நோக்கி ஓட்டி சென்றார்.

    அந்த டிராக்டரில் மதுரை ராமலிங்கபுரத்தை சேர்ந்த கணேசன் (39) என்பவர் கிளீனராக இருந்தார்.

    இவர்கள் வந்த டிராக்டர் இன்று காலை 5.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுநெசலூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் இருந்த கணசேன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் டிராக்டரின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அதன் பின்னர் டிராக்டர் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் சந்திரன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×