search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி
    X

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி

    சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். #FirecrackersExplosion
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே வரகனூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்தன. குறிப்பாக பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதால், ஆலை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

    வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #FirecrackersExplosion
    Next Story
    ×