என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் தமாகா இடம் பெறும் - ஜிகே வாசன்
Byமாலை மலர்5 Feb 2019 11:25 AM GMT (Updated: 5 Feb 2019 11:25 AM GMT)
தமாகாவை பொறுத்தவரை மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் இடம் பெறும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #GKVasan
சென்னை:
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் நாட்கள் இருப்பதால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. த.மா.கா.வை பொறுத்தவரை மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் இடம் பெறுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அந்த வகையில் தொடர்ந்து பல்வேறு நிலைகளிலும் கருத்துக்கள் கேட்டு வருகிறோம் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டணி அமைத்து தான் போட்டி என்பது இல்லை.
எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ முடிவை எட்டுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சியின் அகில இந்திய தலைமையின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நியமன தலைவர்களுக்கும் த.மா.கா. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின்போது துணை தலைவர் கோவை தங்கம், சக்தி வடிவேல், சேகர் மாநில செயலாளர் என்.டி.எஸ். சார்லஸ், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர். #GKVasan
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் நாட்கள் இருப்பதால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. த.மா.கா.வை பொறுத்தவரை மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் இடம் பெறுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அந்த வகையில் தொடர்ந்து பல்வேறு நிலைகளிலும் கருத்துக்கள் கேட்டு வருகிறோம் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டணி அமைத்து தான் போட்டி என்பது இல்லை.
எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ முடிவை எட்டுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சியின் அகில இந்திய தலைமையின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நியமன தலைவர்களுக்கும் த.மா.கா. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின்போது துணை தலைவர் கோவை தங்கம், சக்தி வடிவேல், சேகர் மாநில செயலாளர் என்.டி.எஸ். சார்லஸ், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர். #GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X