search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு செய்யப்பட்ட உடுமலை கவுசல்யாவிடம் விசாரணை நடத்த குழு
    X

    சஸ்பெண்டு செய்யப்பட்ட உடுமலை கவுசல்யாவிடம் விசாரணை நடத்த குழு

    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கவுசல்யா சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படுகிறது. #UdumalaiKowsalya

    குன்னூர்:

    ஆணவ கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ கன்டோன்மெண்ட்டில் கிளர்க் பணி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சியில் பேசியதாக முதன்மை அதிகாரி ஹரிஷ்வர்மா கவுசல்யாவை சஸ்பெண்டு செய்தார். இது குறித்து ஒரு வாரத்துக்குள் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.

    விசாரணை அறிக்கை பாதுகாப்புதுறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.  #UdumalaiKowsalya

    Next Story
    ×