என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடசென்னையில் ரூ.66 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி- 2 தொழில் அதிபர்கள் கைது
Byமாலை மலர்23 Jan 2019 10:13 AM GMT (Updated: 23 Jan 2019 10:13 AM GMT)
வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைதானார்கள்.
சென்னை:
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் அதனை கண்காணிப்பதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக வடசென்னை ஜி.எஸ்.டி. வரி கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக சீனிவாசலு, போஸ் ஆகிய 2 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களது நிறுவனத்துக்கு பொருட்கள் வாங்கியதாக போலியாக கணக்கு காட்டி இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்தே அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பாக 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.569 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #GST
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் அதனை கண்காணிப்பதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக வடசென்னை ஜி.எஸ்.டி. வரி கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக சீனிவாசலு, போஸ் ஆகிய 2 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களது நிறுவனத்துக்கு பொருட்கள் வாங்கியதாக போலியாக கணக்கு காட்டி இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்தே அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பாக 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.569 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #GST
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X