என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பலூர் அருகே குடிசை வீடு எரிந்து தாய்-குழந்தை பலி
Byமாலை மலர்15 Dec 2018 4:26 AM GMT (Updated: 15 Dec 2018 4:26 AM GMT)
அம்பலூர் அருகே குடிசை வீடு எரிந்து தாய், குழந்தை உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம், அம்பலூர் அருகே உள்ள தும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). மகள் தனலெட்சுமி (2) வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் சிம்னி விளக்கு பயன்படுத்தி வந்தனர்.
நேற்று இரவு 10 மணிக்கு நந்தீஸ்வரன் வெளியே சென்றிருந்தார். அப்போது சரஸ்வதி குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டில் இருந்த சிம்னி விளக்கு திடீரென சரிந்து குடிசையில் தீப்பற்றியது.
வேகமாக பரவிய தீ குடிசை முழுவதும் எரிந்தது. வீட்டிற்குள் இருந்த சரஸ்வதி குழந்தை தனலெட்சுமி உடல் கருகினர். அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். அதற்குள் உடல் கருகிய சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
தீக்காயத்துடன் துடித்த குழந்தையை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே குழந்தை உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரஸ்வதிக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இதனையடுத்து அவரது கணவரிடம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். #Fireaccident
வேலூர் மாவட்டம், அம்பலூர் அருகே உள்ள தும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). மகள் தனலெட்சுமி (2) வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் சிம்னி விளக்கு பயன்படுத்தி வந்தனர்.
நேற்று இரவு 10 மணிக்கு நந்தீஸ்வரன் வெளியே சென்றிருந்தார். அப்போது சரஸ்வதி குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டில் இருந்த சிம்னி விளக்கு திடீரென சரிந்து குடிசையில் தீப்பற்றியது.
வேகமாக பரவிய தீ குடிசை முழுவதும் எரிந்தது. வீட்டிற்குள் இருந்த சரஸ்வதி குழந்தை தனலெட்சுமி உடல் கருகினர். அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். அதற்குள் உடல் கருகிய சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
தீக்காயத்துடன் துடித்த குழந்தையை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே குழந்தை உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரஸ்வதிக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இதனையடுத்து அவரது கணவரிடம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். #Fireaccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X