என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புயல் பாதிப்பு நிவாரணம் போதிய அளவு கிடைக்கவில்லை- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
Byமாலை மலர்4 Dec 2018 11:30 AM GMT (Updated: 4 Dec 2018 11:30 AM GMT)
கஜா புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதி யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது என்றும் அதை வைத்து எதையும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #RajendraBalaji
சிவகாசி:
சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு வழக்கில் நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்ட மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு நடவடிக்கை எடுத்தார்? எப்படி சட்ட போராட்டம் நடத்தினார் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நன்றாக தெரியும்.
இந்திய அளவில் பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு காரணம் நமது முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைதான்.
தமிழக அரசு என் முன் வந்து நிற்பதால் பட்டாசு வெடிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள் கூறிப்பிட்டுள்ளனர். பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளேன்.
அதிகாரிகளோடு கலந்து பேசி சொல்வதாக என்னிடம் தமிழக முதல்வர் தெரிவித்தார். கஜா புயல் பாதிப்பை மத்திய அரசிடம் நாங்கள் கேட்ட நிதி கிடைக்கவில்லை. மிகப்பெரிய பாதிப்பை டெல்டா மாவட்டம் சந்தித்துள்ளது. கொடுமையான பாதிப்பை டெல்லா மாவட்ட விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
மத்திய அரசு ஏன் நமக்கு தேவையான நிதியை கொடுக்க மறுக்கின்றது என்று டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கிறது.
தமிழக அரசு கேட்ட நிதியை கொடுத்திருந்தால் கூடுதல் திட்டங்கள் கிடைத்திருக்கும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மத்திய அரசு கொடுத்த நிதி யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது. அதை வைத்து எதையும் செய்ய முடியாது.
அனைத்து அமைச்சர்களும் டெல்டா மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது எடப்பாடி ஆட்சியிலும் பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுள்ளோம்.
தீர்மான நகலை மத்திய அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழகத்தில் தலைவர்களால் அமைப்பது கூட்டணி அல்ல. மக்கள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும். எந்த தேர்தல் வந்தாலும் மக்களோடு கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். பா.ஜ.க.வோடு கூட்டணி குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர்தான் முடிவு செய்வார்கள்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #GajaCyclone #RajendraBalaji
சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு வழக்கில் நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்ட மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு நடவடிக்கை எடுத்தார்? எப்படி சட்ட போராட்டம் நடத்தினார் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நன்றாக தெரியும்.
இந்திய அளவில் பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு காரணம் நமது முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைதான்.
தமிழக அரசு என் முன் வந்து நிற்பதால் பட்டாசு வெடிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள் கூறிப்பிட்டுள்ளனர். பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளேன்.
அதிகாரிகளோடு கலந்து பேசி சொல்வதாக என்னிடம் தமிழக முதல்வர் தெரிவித்தார். கஜா புயல் பாதிப்பை மத்திய அரசிடம் நாங்கள் கேட்ட நிதி கிடைக்கவில்லை. மிகப்பெரிய பாதிப்பை டெல்டா மாவட்டம் சந்தித்துள்ளது. கொடுமையான பாதிப்பை டெல்லா மாவட்ட விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
மத்திய அரசு ஏன் நமக்கு தேவையான நிதியை கொடுக்க மறுக்கின்றது என்று டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கிறது.
தமிழக அரசு கேட்ட நிதியை கொடுத்திருந்தால் கூடுதல் திட்டங்கள் கிடைத்திருக்கும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மத்திய அரசு கொடுத்த நிதி யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது. அதை வைத்து எதையும் செய்ய முடியாது.
அனைத்து அமைச்சர்களும் டெல்டா மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது எடப்பாடி ஆட்சியிலும் பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுள்ளோம்.
தீர்மான நகலை மத்திய அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழகத்தில் தலைவர்களால் அமைப்பது கூட்டணி அல்ல. மக்கள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும். எந்த தேர்தல் வந்தாலும் மக்களோடு கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். பா.ஜ.க.வோடு கூட்டணி குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர்தான் முடிவு செய்வார்கள்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #GajaCyclone #RajendraBalaji
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X