search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ2 ஆயிரம் கள்ள நோட்டை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ரூ2 ஆயிரம் கள்ள நோட்டை படத்தில் காணலாம்.

    ஆம்பூரில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து சப்ளை: அ.ம.மு.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

    ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த வாலிபர் ரூ.2,000 நோட்டை கொடுத்து சிகரெட் பாக்கெட் வாங்கினார்.

    அந்த நோட்டை பார்த்ததும் சந்தேகம் அடைந்த கடைக்காரர் அது குறித்து கேட்டுள்ளார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

    கடைக்காரர் சத்தம் போடவே அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரது பாக்கெட்டை பார்த்த போது அதில் 2,000 ரூபாய் நோட்டுகள் 11 இருந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது28) என்பது தெரியவந்தது. ஜோலார்பேட்டை நகர அ.ம.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். அவரிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுத்து இருப்பது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க. நகர துணை செயலாளர் அலெக்சாண்டர் (35). ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

    அலெக்சாண்டர்-சதாம்உசேன்

    இதையடுத்து ஆம்பூர் போலீசார் அலெக்சாண்டர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அங்கு ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கும் எந்திரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இருவரும் சேர்ந்து வாணியம்பாடி வார சந்தையில் ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றியுள்ளனர்.

    ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால் அலெக்ஸ் சாண்டர் ரூ.4 ஆயிரம் கமி‌ஷன் கொடுத்துள்ளார். இவர் பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×