search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி வயதானவர்களிடம் நூதனமுறையில் நகை கொள்ளை - பெண் கைது
    X

    நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி வயதானவர்களிடம் நூதனமுறையில் நகை கொள்ளை - பெண் கைது

    நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி வயதானவர்களிடம் நூதனமுறையில் நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேடு:

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரும் வயதானவர்களை குறி வைத்து பெண் ஒருவர், கலைஞர் நிதி உதவி தொகை ரூ.10 ஆயிரம் தருகிறார்கள் என்று கூறி அவர்களிடம் இருந்து நகைகளை பெற்று தலைமறைவாகி விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதுபற்றி நகைகளை ஏமாந்த சிலர் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நூதன முறையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட ரெட்டேரி கண்ணகி நகர் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த லட்சுமி (40) என்ப வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    அவர் வெளியூரில் இருந்து வரும் வயதான பெண்களை குறிவைத்து நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி அவர்கள் அணிந்து இருந்த நகையை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தலைமறைவாகி வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 1 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×