search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி காங்கிரஸ் வக்கீல் உண்ணாவிரதம்
    X

    ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி காங்கிரஸ் வக்கீல் உண்ணாவிரதம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி கோவில்பட்டியில் காங்கிரஸ் வக்கீல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். #RajivGandhi #Perarivalan
    கோவில்பட்டி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அக்கறை காட்டி வரும் தமிழக அரசினை கண்டித்தும், ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறப்பு சட்டம் இயற்றி உடனடியாக தூக்கிலிட வேண்டும்,

    மேலும் அவர்களின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி வக்கீல் பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தினை தொடங்கினார்.

    அவர் தனது உடலில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் ராஜீவ் காந்தி படத்தினை மாட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உண்ணாவிரதம் இருந்த அய்யலுச்சாமியை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #RajivGandhi #Perarivalan
    Next Story
    ×