search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி பிறந்தநாள்- அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு மோதிரம் பரிசு
    X

    பிரதமர் மோடி பிறந்தநாள்- அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு மோதிரம் பரிசு

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்கம் மோதிரம் அணிவித்தார். #BJP #HappyBirthDayPM #HappyBdayPMModi
    சென்னை:

    பிரதமர் மோடியின் பிறந்த நாளை இன்று பா.ஜனதாவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கினார்கள்.

    ரத்ததான முகாம், மருத்துவமுகாம் உள்ளிட்ட சேவைப் பணிகளை செய்தார்கள். மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றியடைய செய்யும் வகையில் இனிப்புகள் வழங்கி பொது மக்களை திரட்டி தெருக்களை சுத்தப்படுத்தும் பணியிலும் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டார்கள்.

    மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன் புரசைவாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.


    அதன்படி இன்று அந்த ஆஸ்பத்திரியில் சந்தோஷ் குமார்-ஸ்ரீதுர்கா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் அங்கிருந்த 15 குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் வழங்கினார்.

    திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு கோலப் போட்டிக்கு தொகுதி தலைவர் திருப்புகழ் ஏற்பாடு செய்து இருந்தார். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் கோலம் போட்டு இருந்தனர். சிறந்த கோலங்களுக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் பரிசு வழங்குகிறார்.#BJP #HappyBirthDayPM #HappyBdayPMModi
    Next Story
    ×