என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணை முதல்வரின் தம்பிக்கு ராணுவ விமான உதவி- பா.ஜ.க. மாநில செயலாளர்
Byமாலை மலர்28 July 2018 7:25 AM GMT (Updated: 28 July 2018 7:25 AM GMT)
மனிதாபிமான அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் கூறியுள்ளார். #Opanneerselvam
பெரம்பலூர்:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ராகவன் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. ஒரு பூத் கமிட்டியில் 4 பேர் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. அதன் பிறகு பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி வருகிற நவம்பர் மாதத்தில் வருகை தரவுள்ளார்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த விமானம் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் மனிதாபிமான அடிப்படையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் கடமையாகும். இதில் ராணுவ மந்திரிக்கு பிரத்யேகமான முறையில் அதிகாரம் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக தமிழகத்தில் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Opanneerselvam
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ராகவன் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. ஒரு பூத் கமிட்டியில் 4 பேர் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. அதன் பிறகு பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி வருகிற நவம்பர் மாதத்தில் வருகை தரவுள்ளார்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த விமானம் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் மனிதாபிமான அடிப்படையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் கடமையாகும். இதில் ராணுவ மந்திரிக்கு பிரத்யேகமான முறையில் அதிகாரம் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக தமிழகத்தில் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Opanneerselvam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X