search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் கொலை
    X

    தொண்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் கொலை

    தொண்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். #LocalBodyElections ##CooperativeUnionElection

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணி என்பவருக்கும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக விரோதம் இருந்தது.

    இந்த முன்விரோதத்தில் அடிக்கடி மோதலும் நடந்துள்ளது. நேற்று பட்டாணி தரப்பை சேர்ந்த ஜெயக்குமார் (வயது32) அங்குள்ள கடற்கரை பகுதியில் படுத்து இருந்தார்.

    இன்று அதிகாலை அங்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஜெயக்குமாரின் தம்பி வசீகரன் (27), உறவினர் விஜயராஜன் (27) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களையும் மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நளாயினி, ஏட்டு மாரி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜெயக்குமாரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் சேது தரப்பினர் தான் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த தரப்பை சேர்ந்த 2 பேர் காயங்களுடன் திருவாடானை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LocalBodyElections ##CooperativeUnionElection

    Next Story
    ×